முதலமைச்சர் நலம் விசாரிக்க அப்பல்லோ சென்றார் மு. க. ஸ்டாலின் : 

தமிழக  எதிர்கட்சித் தலைவரும்  தி.மு.க பொருளாளருமான மு. க . ஸ்டாலின்  இன்று மாலை  முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம்   விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனை சென்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,  தி.மு.க .  தலைவர் கருணாநிதியின்  ஆணைப்படி, ஜெயலலிதாவின்  உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்ததாக தெரிவித்தார். 

முதலமைச்சரை  நேரில் சந்திக்க முடியாவிட்டாலும்  அதிமுக  அமைச்சர்கள் மற்றும்  மருத்துவர்களிடம்  அவரது  உடல் நிலை குறித்து  கேட்டறிந்ததாக அவர் கூறினார். 

முதலமைச்சர் ஜெயலலிதா  விரைவில் பூரண குணம் பெற்று  இல்லம் திரும்பி தமது பணிகளை  தொடர்வார் என்று  மு.க. ஸ்டா‌லி‌ன்  நம்பிக்கை தெரிவித்தார். 

ஸ்டாலினுடன்  துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் அப்பல்லோ  மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். 

Leave a comment